- Details
- Super bruker
- கத்தோலிக்க ஒன்றியம்
- Hits: 1627
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்
1960பதுகளிலேயே ஈழத்தமிழர் நோர்வேயில், அதிலும் குறிப்பாக பேர்கனில் குடியேறத்தொடங்கியிருந்தனர். அவர்களுள் கத்தோலிக்கரின் ஆன்மிக விடயங்களில் கவனம் செலுத்தவென அவ்வப்போது கத்தோலிக்க குருக்களினால் ஆற்றப்பட்ட ஆன்மிகப்பணி காலக்கிரமத்தில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு ஒஸ்லோ மறைமாவட்ட நிர்வாகரீதியிலான பணிகளில் தனி இடத்தையும் பெற்றுக்கொண்டது.
அருட்த்தந்தை இருதயநாதன் அவர்களின் ஆரம்பப்பணிகள் (1988-1998) பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் உருவாகி சரியான பாதையில் பயணிக்க உறுதியான அடித்தளமிட்டன. அவரைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு முதல் யாழ் அமல மரித்தியாகிகள், முறையே
வண. ஜகத் பிரேம்நாத் அமதி (2004-2011),
வண. எட்மண்ட் றெஜினோல்ட் அமதி (2011–2017)
வண.ஜெயந்தன் பச்சேக் அமதி (2018- 2022) மற்றும்
வண.ஜோன் சாமிநாதர் றெனே பீஷ்மன் அமதி (2022- )
அகியோரின் தொடர்பணிகளினால் வழிநடத்தப்படுகின்றது. நடப்புக்காலத்தில் 150 இற்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்களைக் கொண்டிருக்கும் பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் பேர்கன் புனித பவுல் பங்குக்குழுமத்தில் உயர்த்துடிப்புள்ள ஓர் அங்கமாகச் செயற்பட்டுவருகின்றது.